Tuesday 24 April 2012

வலைகளை அலசுங்கள்

இன்றைக்கு அனேக சபைகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தவுடனே ஒரு பாரம்பரிய லிமிடெட் கம்பெனி போல தொடர்ந்து வளராமல், தங்களது பழைய நிலையிலேயே நிலைகொண்டுள்ளன...
இதற்கு முழு காரணம் மனிதர்களை பிடிக்கும் வலைகள் சரியாக பழுதுபார்க்கப்பட்டு அலசபடுவதில்லை,மனித கற்பனைகளுக்கு இடம் அளிக்கப்பட்டு தேவ வசனங்களுக்கு இடம் மறுக்கப்படும் தன்மை..
இதையே தான் நம் கர்த்தராகிய இயேசுவும் பின்வருமாறு கூறுகிறார்...
மத்தேயு 13:47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
ஆகவே சுயத்தை ஆராய்ந்து ,பிடிக்கும் படி வலைகளை அலசுதல் அவசியமாகிறது..
ஒரு முறை சீமோன் இயேசுவை அறிகிறதற்கு முன், இரவு முழுதும் பிரயாசபட்டும் எந்த மீனும் அகப்படாமல் சகோதரர்களுடன் சோகமாய் வலையை பழுது பார்த்து அலசி கொண்டிருந்தான்.காரியம் தெளிவாய் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது
லூக்கா
5 அதிகாரம் 1-10 வசனங்களை படியுங்கள்..
அறிவியலின் படி வெளிச்சம் மற்றும் வெப்பநிலை கடலின் மேற்பரப்பினில் இரவில் தான் குறைவாய் இருக்கும்.. அச்சமயங்களில் பெருமளவு மீன்கள் மேற்பரப்பிற்கு வரும். இதை அறிந்திருக்கிற மீனவர்கள் இரவில் படகை செலுத்தி மீன் பிடிப்பது வழக்கம்..
இம்மாதிரியான முறையை தான் நம் சீமோனும் பின்பற்றுகிறார்.அனால் பலன் இல்லை.. சோர்வுடன் தேவனின் பார்வையில் தன வலைகளில் ஏதேனும் கோளாறா என பழுதுபார்த்து அலசிகொண்டிருக்கிறார்.இதைபோல் மற்ற மீனவர்களும் அலசி கொண்டு தான் இருகின்றனர்.ஆனால் இயேசு தன படகில் தனக்கு இடம் தந்து படகை கடலில் சற்றே தள்ளி கீழ் படிந்த சீமொனுக்கும் அவன் படகில் இருந்தவர்க்கும் தான் அற்புதத்தை வழங்கினார்..
சோர்வுடன் காணப்பட்ட சீமோனை தேவன் மீண்டுமாய் ஆழ்கடலுக்கு சென்று வலையை வீசு என்றார்.அவன் தனக்கு இரவு நேரிட்ட அனுபவத்தை முன் வைத்தாலும்,இயேசுவின் போதகத்தை கண்டு அவர் மேல் நம்பிக்கை கொண்டு மீன் பிடிக்க சாதகம் குறைந்த நண்பகல் வேளையில் படகை ஆழ்கடல் நோக்கி செலுத்தினான்.. வலைகள் கிழியதக்கதாய் மீன்கள் அகபட்டவுடன் பேதுரு தன்னையும் அலசிப்பார்த்து பின்வருமாறு கூறுகிறார்.
லூக்கா 5:8 சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
ஏசுவோ அவனை நோக்கி தன்னை பின்சொல்ல கூறி மனிதர்களை பிடிக்கிறவனாக்கினார். இவைகளை பெற பேதுருவிற்கு தகுதி என காண்பது பின்வருபவைகளே.,
  1. தேவனுக்கு தம்முடையவைகளில் இடம் தருதல்.
  2. தம்முடைய காரியங்களை கபடு இல்லாமல் பகிர்தல்
  3. வலைகளையும்,தன சுயத்தையும் அலசுதல்.
  4. கட்டளையின் நுகத்தை சோர்விலும் சுமத்தல்.
இக்காரியத்தை அலசுகிற நாம்,மேற்கூறிய காரனங்களை நம் சபைகளிலும், வாழ்விலும்நடைமுறை படுத்தும் போது அதிகமான ஆசிர்வாதங்களையும்,ஆத்துமாக்களை ஆதாயமும் செய்துகொள்வோம்..
நீதிமொழிகள் 14:15 விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!!

இன்னும் தொடர்பான காரியங்களையும் ஆராய்வோம்..
மனிதர்களை பிடிக்கும்படி அழைப்பை பெற்றிருந்த சீமான் பேதுரு, கர்த்தராகிய இயேசு மரித்து உயிர்த்ததை அறியாமல் மீண்டும் தன் பழைய தொழிலாகிய மீன் படிக்கும் தொழிலுக்கு போனார்.
யோவான் ( 21 :3 )
சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
அப்போஸ்தலரான பேதுரு தாம் பெற்றிருந்த ஊழியத்தை மறந்து, தம்முடைய பழைய வாழ்க்கையின் காரியங்களுக்கு பின்வாங்க முற்படுகிறார்..
ஆனால் அவரை ஊழியத்திற்கு அழைத்த நம் தேவன் உண்மையுள்ளவர்.பின்வாங்கும் சமயத்தில் கர்த்தர் இடைபட்டார்.
யோவான் ( 21 :3 ) விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.

யோவான் ( 21 :5 ) இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.
பின்வாங்க முற்படுகிரவர்களை பிள்ளைகளே என அழைக்கும் நம் தேவன் தம் மகிமைகென அழைத்தவர்களில் ஒருவரையும் இழந்துவிடுபவர் அல்ல.
சிஷர்களின் நிலைமையை அவர்களுக்கு உணர்த்தி, தம்மை வெளிபடுத்த நம் இயேசுவானவர் செய்த அற்புதமானது ஏற்கனவே பேதுருவின் அழைப்பின் போது செய்யப்பட்ட அற்புதத்தை போன்றது ..பின் வரும் வசனங்களை பாருங்கள்..

யோவான் ( 21 :6)அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
இப்படி இரண்டாம் முறை அதே மாதிரியான அற்புதத்தை பேதுரு பார்த்திருந்தும்,அற்புதம் செய்தவர் இயேசு என்பதை யோவான் எனும் சீஷன் கூறி பேதுரு அறியும்படியாயிற்று.
ஆனால் கர்த்தரின் முன் தன்னை நிர்வாணி என்பதை உடனே அறிந்து தக்கதை செய்கிறார்.
யோவான் ( 21 :7) அவர் கர்த்தரென்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
இவ்வாறாக அங்கு கூடியிருந்த சிஷருக்கும்,பேதுருவிற்கும் தம்மை வெளிபடுத்தினார்.
பந்தியிருந்த பின்பு,இயேசு மூன்றுமுறை பேதுருவை நோக்கி என்னை நேசிகிறாயா என அதே வார்த்தைகளை கொண்டு கேட்டார்..
மூன்று முறை மறுதலித்து, வாழ்வானாலும்,சாவானாலும் உம்மை பின்பற்றுவேன் என கர்த்தரிடம் கூறிய கூற்றிற்கு மாறாக மனுஷருக்கு பயந்து,பின்வாங்கிய பேதுருவால் இரண்டு முறை சலனம் இல்லாமால் பின்வருமாறு பதில் கொடுக்க முடிந்தது..
யோவான் ( 21 :15,16) அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்:என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
மூன்றாம் முறை அதே கேள்வியை கர்த்தர் கேட்டபோது அவன் துக்கமடைந்ததாக வேதம் கூறுகிறது.இந்த துக்கம், தேவன் மூன்று முறை அவனை நோக்கி கேட்ட காரணத்தை காட்டியிருக்கும்.
தன உண்மையட்ட்ற தன்மையை உணர்ந்த அவன் ,உணர்வோடு அவன் கூறிய பதில் போதுமானதாக தேவ சந்நிதியில் கருதப்பட்டது.இயேசுவின் கேள்வி அத்துடன் முடிகிறது.மனிதர்களை பிடித்தவர் மேய்ப்பராக கர்த்தரால் உயர்த்தபடுகிறார்..
யோவான் ( 21 :17) மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
தேவன் தம் மகிமைகென அழைத்தவர்களை பின்வாங்குபவர்களாக விடுகிறதில்லை.பின்மாற்றகாரர்களே பின்வாங்குகிறார்கள்.
ஊழியத்தில் பின்வாங்கும் படிக்கு அனேக சோதனை வரலாம்,பழைய வாழ்க்கை சிறப்பானது என நமக்கும் தோன்றலாம்.திராணிக்கு அதிகமான சோதனைகளை அனுமதிக்காத தேவன் உண்மையுள்ளவர்.பின்வான்காதபடிக்கு தம்முடையவர்களை காப்பார்.
தேவனே !!! வரபோகும் மோசமான காலங்களில் தேவனுக்காக நிற்பவர்களின் கூட்டமாய் நாங்கள் சோதனையிலும் உம்மை மகிமைபடுத்த கிருபை தாரும்..
-----------------------------------------------------------------------------------
ரோமர் 14:11முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும்

சிலுவை மரம்



நேராகவும் கிடையாகவும் இரு மரங்கள் ஒன்றன் மேல் ஒன்று வைக்கப்பட்டு இறுக்கமாகப் பிணைக்கப்படம்போது அது “சிலுவை“ என அழைக்கப்பட்டது. அதேசமயம், அந்நாட்களி்ல் மரணமும் பலவிதங்களில் நிறைவேற்றப்பட்டது. ஒன்றில் குற்றவாளி அந்த மரத்திலே கட்டித் தொங்கவிடப்படுவான்; அல்லது ஆணிகளால் அறையப்பட்டு தொங்கவிடப்படுவான். இப்படிப்பட்ட ஒரு சிலுவையில்தான் இயேசுவும் ஆணிகளால் அறையப்பட்டு, சாவிற்காக தொங்கவிடப்பட்டார். எந்தவிதத்தில் தொங்கவிடப்படாலும், சிலுவையில் தொங்கும் ஒருவன் மூச்சுவாங்க முடியாமல், தனது சரீரத்தின் பாரத்தைத் தாங்கமுடியாமல், விலா எலும்புகள் நோவெடுக்க, தசைநார்கள் புடைப்பெடுக்க, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தே மரிப்பான். 
இயேசுகிறிஸ்து உலகில் வாழ்ந்த அந்தக் காலப் பகுதியில் ஆட்சியிலிருந்த ரோம சாம்ராஜ்யத்தில் இந்தச் சிலுவை மரம் மரணதண்டனை நிறைவேற்றப்படவென்றே செய்யப்பட்டது. அதிலும் சாதாரண குற்றவாளிகளையல்ல மிகப் பயங்கர குற்றத்தில் ஈடுபட்டவர்கள், சபிக்கப்பட்டவர்கள், சமுதாயத்திலே வெகு இழிவான குற்றவாளிகள் என்று கருதப்பட்டவர்கள்.. இப்படிப்பட்டவர்களுக்கே சிலுவை மரணத் தீ்ர்ப்பு வழங்கப்பட்டது. மொத்தத்தில் சிலுவை ஒரு அவமானச் சின்னம், சிலுவை மரணத் தீர்ப்பு ஒருவனுக்கு கொடுக்கப்பட்டால் அவனில் யாருமே கருணை காட்ட மாட்டார்கள். அத்தனை இழிவானது இந்தச் சிலுவை மரணம், அந்தச் சிலுவை மரணம்தான் இயேசுவுக்கும் தீர்ப்பானது. 
இன்று இந்தச் சிலுவையின் நிலைமையே மாறிவிட்டது. பெண்களின் கழுத்தில் தொங்கிய சிலுவை, இன்று ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் காதிலும் மூக்கிலும்கூட தொங்குகிறது. ஆனால் வேதாகமம் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டும் சிலுவை அதுவல்ல. வேதாகமம் நமக்குக் காட்டிய சிலுவை, அது இயேசு சுமந்த சிலுவை, நமது பாவம் தீர்க்கப்பட்ட சிலுவை, இது வெறும் கையால் செய்யப்படட ஒன்றோ அல்லது ஒரு அலங்காரப் பொருளோ அல்லது வெறும் சின்னமோ அல்ல. அன்று ரோமப் பேரரசுக்கு முன் இயேசு சுமந்துசென்ற சிலுவை, மரணதண்டனை நிறைவேற்றப்படுகின்ற வெறும் மரமாக இருந்தது. ஆனால், இன்று நமக்கு அப்படி இல்லை. அது வெறும் மரச்சிலுவை அல்ல; நமது பாவங்களினிமித்தம் இயேசு சிலுவை சுமந்து மரித்து, பின்னர் உயிர்த்ததால், அந்தச் சிலுவை இன்று நமக்கு ஒரு விடுதலையின் சத்தியத்தைத் தந்திருக்கின்றது. அது நம் வாழ்வில் நம்மோடு ஒன்றிக்க வேண்டும். இன்று கிறிஸ்தவர்கள் என்று சொன்னவுடன் நம்முன் சிலுவையையும் உலகம் இணைத்துததான் பார்க்கிறது.சிலுவை கிறிஸ்தவர்களின் ஒரு சின்னமாக மாறிவிட்டிருப்பது ஒரு துக்கத்திற்குரிய காரியமே. ஏனெனில் ஏராளமான கிறிஸ்தவர்களின் வாழ்வில் அந்தச் சிலுவையும் இல்லை; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவும் இல்லை. 
இயேசுவின் முதல்வருகை இன்றைய காலகட்டத்தில் நடைபெற்றிருந்தால் சிலுவை நமது வாழ்வில் இடம் பெற்றிருக்குமா? ஆனால், இயேசு வந்த காலம் தேவனுடைய காலம். அது தேவனால் நியமிக்கப்பட்ட காலம். அதை யாராலும் மாற்ற முடியாது. “காலம் நிறைவேறியபோது....“ (காலத்தியர் 4:5) என்று பவுல் எழுதியது. இதனைத்தான். சிலுவை மரணம் மிக இழிவான ஒன்றாகக் கருதப்பட்ட காலத்தில்தான் இயேசு வந்தார். மிக இழிவானவன் என்று உலகம் கருதக்கூடிய ஒருவனைக் கூட இழந்துவிடக் கூடாது என்பதுதான் பிதாவின் சி்த்தம். பரிசுத்தராகிய இயேசு சிலுவையிலே தொங்கியதால் இழிவென்று கருதப்பட்ட சிலுவைக்கும் மேன்மை கிடைத்தது. இதுதான் உண்மை. இதுவரையிலும் வெறுக்கப்பட்ட அந்த இழிவான சிலுவை, இப்போது பாடுகளின் சின்னமல்ல; பாடுகளின் மத்தியிலும் மகிழ்ச்சியின் சின்னமாயிற்று இதுவரையிலும் அருவருக்கப்பட்ட சிலுவை இப்போது அன்பின் அடையாளமாயிற்று.
அதற்காக சிலுவையின் கோரமான கோலம் மறக்கப்பட்டலாமா? சிலுவையின் தார்ப்பாரியம் மாற்றமடையுமா? சிலுவையின் தார்ப்பரியம் மாற்றமடையுமா? சிலுவையில் செய்யப்பட்ட பரிகாரத்தின் மேன்மை வேறுபடுமா? நாம் அவற்றை மறந்த பாடுகள் வேண்டாம். இயேசு தரும் சுகஜீவியம் மாத்திரம் போதும் என்றால் அது தகுமா? பாவமற்றவர் சுமந்த அந்தப் பாரச்சிலுவை. மாசமற்றவர் மரித்த அந்த தூய சிலுவை, நான் மீட்படைய நிமிர்த்தப்பட்ட அந்த மீட்பின் சிலுவை; இதை மறந்து மனம்போனபடி வாழலாலாமா? அது, சிலுவையிலறையப்படட இயேசுவையே மறுதலிப்பதுபோல ஆகாதா? இதை உணருகின்ற எவனும் இயேசு சுமந்த சிலுவையும் அத்துடன் தான் சுமக்கவேண்டிய சிலுவையையும் ஒருபோதும் பறக்கணியான். 
(இவ்வாக்கமானது இலங்கை சத்தியவசனம் வெளியிட்ட என் சிலுவையை எடுத்து எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். நூலாசிரியர் சாந்தி பொன்னு)

ஜெருசலேம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது இயேசுநாதரின் கல்லறையா?


இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுகின்றன. மனிதனின் ஆராய்ச்சிக் களங்கள் பெரும்பாலும் மண், விண், கடல் ஆகியவற்றோடு தொடர்புடையனவாகவே இருக்கின்றன. விண்ணகப் பரப்பிலும் மண்ணின் அடியிலும் அளவில்லாத ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள், தற்போது ஆன்மீக இறைநிகழ்வுகள் சம்பந்தமான விடயஙகளையும் விட்டுவிடவில்லை.


இஸ்ரேலில் இருக்கின்ற ஜெருசலேம் நகரத்தில் மிகப் பழைமையான ஒரு கல்லறையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கல்லறை கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் இது இயேசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். இயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும் எனவும் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். 
இக்கல்லறை ஜெருசலேம் நகரத்தில் ஒரு நவீன மாடிக் கட்டிடத்தின் அடியில் காணப்பட்டிருக்கின்றது. இது கி.பி. 70 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனவும் இதனை இயேசுநாதரின் ஆரம்பகால சீடர்கள் அமைத்திருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகின்றது. கல்லறைக்கு உள்ளே சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் “புனித ஜெகோவா விழித்தெழு“ என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை “தொலைதூரக் கட்டுப்பாட்டு புகைப்படக் கருவி“ மூலமாக கண்டுபிடித்துள்ளார்கள். இதைப் போலவே மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் ஒரு மனிதன் சிக்கியுள்ளதைப் போன்ற உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது பைபிள் கூறப்பட்டிருக்கும் யோனா என்கிற தேவ மனிதரின் கதை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. 
பைபிளின்படி இந்தக் கதையில் யோவாவை விழுங்கிய பெரிய மீன் அல்லது திமிங்கலம் பிற்பாடு அந்த மனிதனை விட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கல்லறைப் பெட்டியில் காணப்படுகின்ற மீனின் உருவத்தை கணினியின் உதவியுடன் பெரிதாக்கிப் பார்த்தபோது அது யோனாவின் கதையைப் பிரதிபலிப்பதாக இருப்பது கண்டறியப்பட்டது. கல்லறைப் பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம், மீனின் உருவம் ஆகியவை கிறிஸ்தவ நம்பிக்கையாகிய “உயிர்த்தெழுதல்“ தெய்வீக அதிசய நிகழ்வைக் குறிப்பிடுவதாக உள்ளது என 'Live Science' என்னும் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதைப்போன்று பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் யோனாவின் கதை பொறிக்கப்படுவது வழக்கம்தான் என்றபோதிலும் இம்மாதிரியானவை எதுவும் மிகத் தொன்மையாக முதலாம் நூற்றாண்டினைச் சார்ந்தாக இருக்கப்பெறவில்லை. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த  இந்தக் கல்லறை கண்டுபிடிப்புகளைப் பற்றிய தகவல்களை இணையத்தில் “பைபிளும் விளக்கமும்“ என்ற தலைப்பில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். 

புதிதாக வெளியிடப்படும் இயேசுவின் கல்லறை பற்றிய கண்டுபிடிப்பு மற்றும் தகவல்களை இணையத்தில் சேர்ப்பது மிகப் பெரிய சர்ச்சையை உண்டுபண்ணக் கூடும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள். 1981 ஆம் ஆண்டிலேயே ஜெருசலேத்தின் இந்தக் கல்லறைக் கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுவி்ட்டபோதிலும், யூதக் குழுக்கள், கல்லறைகளைத் தோண்டுவதையும் ஆய்வு செய்வதையும் எதிர்த்தால், தோண்டி எடுக்கப்பட்ட கல்லறை  அதே இடத்தில் மீண்டும் சீலிடப்பட்டு புதைக்கப்பட்டது ஆராய்ச்சியாளர்களும் அஙகிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

தற்போது சுமார் இருபது ஆண்டுகள் கழித்து அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவர் தபோரும் அவரது சகாக்களும் கல்லறையை தோண்டுவதற்கு அனுமதி பெற்றனர். ஆயினும் யூத அமைப்புக்களின் கடும் எதிர்பைப் முன்னிட்டும் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கு பதிலாக தொலைதூரக் கட்டுப்பாட்டின் மூலம் இயங்கும் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்ட கமராக்களை துளைகள் வழியாக கல்லறைப் பகுதிக்குள் அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : “ஆசீர்வாதம்“ மாத சஞ்சிகை  - April 2012  கட்டுரையாசிரியர் அ. ஆராக்கியராஜ்.

Wednesday 22 February 2012

Daily Bible Verses Sms

தினசரி பைபில் வசனங்களை உங்கள் கைபேசியில் பெற விரும்பினால் உங்கள் கைபேசி எண், உங்கள் பெயர், ஊர் jeevapathail@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு மெயில் செய்யவும் அல்லது 9629131448, 9443381448 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.

Daily Bible Verses Sms
If you need bible verses sms on your mobile please send your name, city, mobile number email to jeevapathail@gmail.com or send sms to 9629131448, 94433881448.

Thursday 16 February 2012

மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாற்றுகள்

அன்பான சகோதர சகோதிரிகளுக்கு ஓர்  அறிவிப்பு

மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாற்றுகள்

எமது தளத்தில் வெளியிடப்பட்துள்ளது.

http://www.siluvaipathai.blogspot.in

சத்துருவை சாதாரணமாக மதிப்பிட வேண்டாம்!

இந்த உலகில் நாம் வாழும் காலங்களில் நமக்கு தெரியாத அனேக காரியங்களை ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தீர்மானித்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற செல்லும்போது பணம் எவ்வளவு தேவைப்படும் என்பது குறித்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை சந்திக்க செல்லும்போது அவர் எப்படிபட்ட்வராக இருப்பார் என்பது குறித்தோ அல்லது தேர்வு எழுத செல்லும் போது என்னென்ன கேள்விகள் கேட்கப்படலாம் என்பது குறித்தோ இன்னும் அனேக காரியங்கள் குறித்தோ நாம்  அனேக நேரங்களில் ஒரு மதிப்பீடு செய்து  அல்லது அனுமானித்து செயல்படுகிறோம்.
 
(நமது இரட்சகராகிய இயேசுவையே முப்பது வெள்ளி காசுக்கு மதிப்பிட்ட சம்பவம் கூட வேதாகமத்தில் உண்டு!)
 
இவ்வாறு அனுமானித்து நாம்செய்யும் காரியங்கள் பல நேரங்களில் சரியாகி விடுவதும் உண்டு சில நேரங்களில் தவறாகி நமக்கு பிரச்சனையை ஏற்ப்படுத்துவதும் உண்டு. நாம் நல்லவர் என்று அனுமானித்த எத்தனையோ பேர் தீயவராக இருந்திருக்கலாம். நாம் தோற்றத்தை பார்த்து தீயவர் என்று அனுமானித்த பலபேர் பழகி பார்த்தபின்னர் நல்லவர்கலாக இருந்திருக்கலாம். பிற மனுஷர்களின் இருதயங்களை நம்மால் அறிய முடியாத காரியத்தால் பலநேரங்களில் நமது அனுமானம் தோல்வியடைந்திருக்கலாம்.
 
ஆகினும் நாம் யாரை குறித்தும் மதிப்பிடும்போதும்  குறைத்து மதிப்பிடாமல் மனதாழமையுடன் நடந்து நம்மை நாம் தாழத்தி மற்றவர்கள் எல்லோரையும் நம்மைவிட மேன்மையானவர்களாக மதிப்பிடுவதே மிகவும் சிறந்தது என்று வேதம் சொல்கிறது.
 
பிலிப்பியர் 2:3  மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
 
பொதுவாக, தூர பிரயாணம் போகும் ஒருவர்  போகும்போது இவ்வளவு செலவாகும் என்று முன்னமே அனுமானித்தாலும் அதற்க்கு சற்று அதிகமான பணத்தை எடுத்துசெல்வது வழக்கம். அதேநேரம் "இவரிடம் சமாளித்து விடலாம்" என்று தெரிந்தால், தேவையானதர்க்கு கொஞ்சம் குறைவாகவே பணம் எடுத்துகொண்டுபோய், இவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்லி பார்த்து சமாளிக்கலாம். 
 
ஆனால் மிகமுக்கியமான பிரச்சனைகளை உண்டாக்கும் காரியங்களை
 நாம் அனுமாநிக்கும்போது அல்லது நிதாநிக்கும்போது நமக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும் அதை கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டு  பாதகமான நிலை ஏற்ப்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என்பதன் அடிப்படையிலேயே அனுமானங்களை தீர்மானிக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்தது.
 
இஸ்ரவேலர் கானானை நோக்கி  போகையில் ஆயியை வேவுபார்த்து வந்த விஷயத்தில் ஒரு தவறான அனுமானத்தை தீர்மானித்ததால் அனேக யுத்த வீரர்கள் மடிய வேண்டிய நிலை உண்டானது.   
 
யோசுவா 7:3  ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்
 
5. ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.
இங்கு நடந்த சம்பவம் ஆகான் என்னும் மனுஷனின் திருட்டினால்  அடிப்படையில் நடந்திருந்தாலும்  இஸ்ரவேலர்களின் அனுமானம் தவறாகி போனது அதனால் பலர் சாக நேர்ந்தது.
அதுபோல் இளைஞனாக தாவீதின் உருவத்தை பார்த்து அவனை தாழ்த்தி தவறாக மதிப்பிட்டு அசட்டை செய்த   கோலியாத்து அவனுடைய கையாலேயே மடிய நேர்ந்தது. 
 
பொதுவாக எதிரியின் பலத்தை  நாம் என்றுமே குறைத்து மதிப்பிட்டு விட கூடாது! ஒருவேளை கூட்டி மதிப்பிட்டு அவன்  தோற்கடிக்கபட்ட  பின்னர் அவன் பலம் குறைந்தவந்தான் என்று அறிவோமானால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை! அனால் எதிரியை குறைத்து மதிப்பிட்டு அவனுக்கு எதிர்த்து நின்று  அவன் நம்மை மேற்கொண்டால் நாம் அனேக கஷ்டங்களை சந்திக்க நேரிடலாம்.
   
தேவன் சாத்தனிலும் பெரியவர் அவரைவிட பெரியவர் எவரும் இல்லை என்பது உண்மை! 
 
I யோவான் 4:4 உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
 
அதேநேரம், சத்துருவான  சாத்தானின் தந்திரங்கள் பற்றி  சரிவர தெரியாமல் அவனையும்  நாம்  குறைத்து மதிப்பிட்டுவிடவும்முடியாது.
சாத்தானை பற்றி நாம் பார்க்கையில், அவன் தேவ தூதர்களோடு தர்க்கித்தது மட்டுமல்ல,  யோபு புத்தகம் சொல்கையில் அவன் கர்த்தருடய சந்நிதிவரை சென்று உத்தமனாகிய யோபுவை பற்றி கர்த்தரிடமே பிராது பண்ணியவன்  என்பதையும் அவனின் சொல்லி கேட்டு கர்த்தர் யோபுவை சாத்தானின் கையில் சோதனைக்கு ஒப்பு கொடுத்தார் என்பதை நாம் அறிய வேண்டும். 
யோபு 2:4 சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்.
அடுத்து, பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுக்கு கெடுதல் செய்ய பக்கத்தில் நின்ற சாத்தான், கர்த்தரை கண்டு கூட அவன் ஓடவில்லை. கர்த்தரின்   கடிந்துகொள்ளும்வரை  அங்கேயே  நிற்கிறான்.  
சகரியா 3:2 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக;
சாத்தான் எதை பார்த்தும் அவ்வளவு சீக்கிரம் ஓடிபோகிறவன் அல்ல! தேவனை ஜெயிக்க முடியாது என்று நன்றாகவே தெரிந்தும் அவரை எதிர்த்து நிற்கவும் துணித அவன், ஒருவர் தேவனின் மகிமையால் நிரப்ப பட்டாலும்கூட அவர் தன்னிடம் உள்ள தேவ வல்லமையை பயன்படுத்தி சாத்தானை எதிர்த்து நின்று விரட்டினால்  மட்டுமே அவன் ஓடுவான்.  
யாக்கோபு 4:7 பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
ஆண்டவராகிய இயேசு எப்பொழுதும் தேவ மகிமையால் நிறைந்த வராகவே இருந்தார். தேவத்துவத்தின் பரிபூரணங்கள் எல்லாமே அவருக்குள் வாசமாயிருந்தது  ஆனாலும்  அவருக்கு நெருக்கமாக இருந்த யூதாசுக்குள்ளேயே சாத்தானால்  புகுந்துகொள்ள முடிந்தது. அதன் பிறகே இயேசு அவனை அனுப்பி விடுகிறார்.    
யோவான் 13:27 அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
 
மேலும் தேவ மகிமையால் நிறைந்த இயேசுகூட  பல இடங்களில் அசுத்த ஆவிகளை விரட்டிய போது அல்லது வெளியே போகும்படி கட்டளை இட்டபோதுதான் அவைகள் ஓடியது.  சில இடங்களில்  அவருக்கு நேரே நின்று அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறது.  
 
லூக்கா 8:27 அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும் வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான். மாற்கு 5:9 அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,
 
மத்தேயு 8:28 அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்
 
கவனிக்கவும்,  இங்கு பிசாசு பிடித்த எவரும் இயேசுவை பார்த்து ஓடவில்லை! அவர் போகும்படி துரத்திய பிறகே போனது.
 
மத்தேயு 8:16 அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி,
 
ஆண்டவராகிய  இயேசுவை விட ஆவியானவரின் மகிமை நிறைந்தவராக யாரும் இருக்க முடியாது என்று கருதுகிறேன். அவரே பிசாசுகளை துரத்தியபிறகுதான் அவைகள் ஓடின எனவே நாமும் தேவனின் வல்லமையால் நிரப்பபட்டாலும் நமது வார்த்தையை பயன்படுத்தி விசுவாசத்த்ல் துரத்தினால் மட்டுமே பிசாசு ஓடுவான்.  
இன்றும் உலகில் அநேகர் எதிரியாகிய சாத்தானை குறைத்து  மதிப்பிடுவதுதால் சாத்தான் அவர்களை சுலபமாக மேற்கொண்டு விடுவிறான் என்பதை அறியமுடிகிறது.
 
தேவனிடம் சாத்தானால் ஒன்றும் செய்யமுடியாமல் போவதற்கு காரணம் அவர் "மஹா பரிசுத்தரும்" "ஒரே நல்லவருமாக" இருப்பதால்தான். ஆண்டவராகிய இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டு  சாத்தானின் பிடியில் இருந்து விடுபட்டு தேவனுடைய பிள்ளைகளாக அதிகாரம் பெற்ற நாமும் தேவனை உறுதியாக பற்றிக் கொண்டு ஆவியில் அனலாய் இருந்து, மேலும் மேலும் பரிசுத்தம் அடைவதோடு, அவர் சொல்லிய வார்த்தைகள்படி வாழ்ந்து, நல்லவராக மாறுவதுமட்டுமே சாத்தானை மேற்கொள்ளும் வழியேயன்றி, பாவத்தை பற்றியும், அதை செய்ய தூண்டும்  சாத்தானை பற்றியும் குறைத்து மதிப்பீடு செய்வது சாத்தான் மேற்கொள்ளவே வழி செய்யும்!     
 
ஒருபுறம் கர்த்தரின் வல்லமை குறித்தும் குறைத்து மதிப்பிட்டு  சாத்தானுக்கு பயந்துவிடகூடது! அதே நேரத்தில் சாத்தானின் தந்திரங்கள் குறித்தும் நாம் சரியாக நிதானிக்காமல் அலட்சியமாக இருந்துவிட கூடாது என்பதை அறிவிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்!

Tuesday 14 February 2012

IMPORTANT MESSAGE.

http://www.thirdlawbjj.com/images/graphics/importantmessage.jpg
SHORT BUT IMPORTANT MESSAGE.
In one day a human being breathes oxygen equivalent to 3 cylinders.
Each oxygen cylinder on an average costs Rs 700, so in a day one uses
Oxygen worth Rs 2100 and for a full year it is Rs 7,66,500. If we
consider an average life span of 65 years; the costs of oxygen we use
become a staggering sum of around Rs 5 Cr.. All this oxygen is derived
free of cost from the surrounding trees. Very few people look at trees
as a resource and there is rampart tree cutting going on everywhere
which should stop.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaDHcYmJ3OmI3BD1I8FFrO3yWc0KnTRpbsRGlIFnAxgvxHsv7260mOA1rhUkCDUFoRUVjNp4hrwxfeVt3k3w7dKY8iVhMhM5IcUGdyu7wDEpZK3HM7EeEoqBcONeu8o70lPBdpbMar0Lw/s640/Save_Trees.jpg

Friday 20 January 2012

இந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு? Pdf புத்தகம் டவுன்லோட்

இந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு? Pdf புத்தகம் டவுன்லோட்

Title :இந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு? - முனைவர் தெ.தேவகலா
Inthiya Thoma Vazhi Thiravida Kiristhava Nadey- Evvaru?(Tamil) (India is a St. Thomas Dravidian Christian Nation- How?)
Author : By Dr. D.Devakala-2004

This book provides the summary of two Ph.D. dissertations of Dr.M.Deivanayagam and Dr. D.Devakala and serves as a handbook to teach students as how to claim that India is a Christian Nation.This book also provides details about the field activities of these two scholars undertaken for the emancipation of Dravidian Indians.

Meipporul Publishers,
278- konnur High Road,
Ayanpuram,
Chennai - 600023

இந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு? Inthiya Thoma Vazhi Thiravida Kiristhava Nadey- Evvaru? in Tamil pdf book download link